Advertisment

காளான் வளர்ப்பு, பிரவுனி தயாரிப்பு பயிற்சி; வேளாண்மை பல்கலை அழைப்பு

தொழில்முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வழங்கும் காளான் வளர்ப்பு மற்றும் பிரவுனி தயாரிப்பு பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு

author-image
WebDesk
New Update
Kovai TNAU

காளான் வளர்ப்பு மற்றும் பிரவுனிகள் தயாரிப்பு குறித்து தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் ஜனவரி 9 ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், காளான் குடில் அமைத்தல், காளான் வித்து மற்றும் படுக்கை தயாரித்தல், தொற்று நீக்கம் செய்தல், காளான் அறுவடை மற்றும் உற்பத்தி செய்வதற்கான வரவு செலவீனங்கள் ஆகியவை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

Advertisment
Advertisement

இதேபோல் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் பயிற்சி வகுப்பில் முட்டை மற்றும் முட்டையில்லாத பிரவுனிகள், மெல்லும் பிரவுனிகள், வால்நட், சாக்லெட், வேர்க்கடலை, நியூடெல்லா, தேங்காய், கேரமல், ராஸ்பெர்ரி போன்ற பல்வேறு வகையான பிரவுனிகள் செய்வதற்கு கற்றுத்தரப்படும்.

தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுய உதவிக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Agriculture Chennai Mushroom
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment