/indian-express-tamil/media/media_files/rJHIH8BP2iiLP9XH9Yda.jpg)
அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஜூனில் நடைபெறும்
தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான தேதி மே 20 முதல் மே 24 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனரகம் திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி பட்டியல் மே 27 அன்று வெளியிடப்படும். முன்னதாக, இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக மே 20 ஆம் தேதி இருந்தது. ஆனால், பின்னர் கடைசி தேதி மே 24 வரை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே முதல் கட்ட கவுன்சிலிங் ஜூன் 10 முதல் 15 வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29 வரையிலும் நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய அரசுக் கல்லூரிகளில் 20% இடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தந்த நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து கல்லூரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். வழக்கமாக, சேர்க்கை செயல்முறை தொடங்கிய பிறகு நாங்கள் விவரங்களைச் சேகரிப்போம், ஆனால் இந்த முறை நாங்கள் எல்லா தகவல்களையும் முன்பே சேகரித்துள்ளோம், என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.