11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், செய்முறைத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிக்குள், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“