பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? தேதியை அறிவித்த தேர்வுத்துறை

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? மாணவர்கள் எங்கு பெற்றுக் கொள்ளலாம்? முழு விபரம் இங்கே

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? மாணவர்கள் எங்கு பெற்றுக் கொள்ளலாம்? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
TN SSLC 10th, HSE +1 Supplementary Result 2025

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 4113 தேர்வு மையங்களில் சுமார் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 10 ஆம் தேர்வில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. அதேநேரம், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: