/tamil-ie/media/media_files/uploads/2023/04/Engineering.jpg)
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் எப்படி இருக்கும் என கல்வி ஆலோசகர் விவேக் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு கணித தாள் எளிதாக இருந்ததால், சென்டம் 10000க்கும் அதிகமாக வர வாய்ப்புள்ளது. ஆனால் இயற்பியல் சற்று கடினமாக இருந்ததால் சென்டம் 400- 500க்குள் இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் வேதியல் மிதமானதான இருந்ததால் சென்டம் 4000க்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப்பில் 80-90 பேர் 200க்கு 200 எடுக்க வாய்ப்புள்ளது. 195க்கு மேல் 3000க்கு அதிகமானோரும், 190க்கு மேல் 10000க்கும் அதிகமானோரும் எடுக்க வாய்ப்புள்ளது.
அதனால் இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் 195க்கு மேல் 1 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 190க்கு மேல் 2 கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 185க்கு மேல் 3 கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது. 180க்கு மேல் 4 கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது. 170க்கு மேல் 5 கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது. 160க்கு மேல் 6 கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது. 150க்கு மேல் 7 கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் கட் ஆஃப் குறையவே அதிக வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.