/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-16T165701.910.jpg)
மீன்வளப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் மீன்வளப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் 11 உறுப்பு கல்லூரிகளும், ஓர் இணைவுக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. பி.எஃப்.எஸ்.சி (B.F.Sc) படிப்பு தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு மீன்வளக் கல்லூரிகளிலும், பி.டெக் (B.Tech) (மீன்வள பொறியியல்), பி.டெக் (சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்புகள் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியிலும் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் மொத்தம் 371 இடங்கள் உள்ளன.
வரும் கல்வி ஆண்டில் மீன்வளப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி தொடங்கியது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு ரூ.300 மட்டும். தகுதியுள்ள மாணவர்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு அதன்மூலம் தேர்வுசெய்யப்படுவர். இதற்கு கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04365-256430, 9442601908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.