தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
முதன்மை செயல் அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : கால்நடைத் துறையில் கூடுதல் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 90,000
முதுநிலை கால்நடை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : கால்நடைத் துறையில் இணை/ துணை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 70,000
பிராணிகள் நல அலுவலர் (கால்நடை மருத்துவம்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : கால்நடை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 50,000
பிராணிகள் நல அலுவலர் (பொது)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000
நிர்வாக அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : நிர்வாக அலுவலர் நிலையில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 30,000
கணக்காளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : கணக்காளர் நிலையில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 20,000
உதவியாளர் மற்றும் தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
மின்னணு தரவு செயலாக்க மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : எம்.சி.ஏ பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cms.tn.gov.in/sites/default/files/announcement/application_tnawb_0.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Tamil Nadu Animal Welfare Board Directorate of Animal Husbandry &Veterinary Services, Veterinary Polyclinic Campus, 571, Nandhanam, Anna Salai,, Chennai-600 035
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“