Advertisment

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Central Govt Jobs,

செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Assistant cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,916

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chengalpattu.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் F0-06 தரைத் தளம், F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு - 603111

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chengalpattu.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Chengalpattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment