செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சித்த மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
யுனானி மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BUMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
மருந்தாளுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 750 (தினசரி)
மருந்து வழங்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 750 (தினசரி)
பல்நோக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 300 (தினசரி)
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/02/2024022291.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் - 603001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/02/2024022235.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“