சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆண் செவிலி உதவியாளர் (Male Nursing Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 15,700 – 50,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை -2, புழல், சென்னை - 66
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://chennai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.