திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆயுஷ் மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.U.M.S படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
மருந்து வழங்குநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: D- Pharm /Diploma in Integrated pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 750
பல்நோக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 300
நிரல் மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.S.M.S படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
தரவு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduation in Computer Application / IT / Business Administration/ B.Tech (C.S) or (I.T)/ BCA/ BBA/ BSC–IT/ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
சித்த மருத்துவ ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.S.M.S படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
சிகிச்சை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Nursing therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2024/12/2024121720.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட நலச் சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 624001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.