New Update
/indian-express-tamil/media/media_files/cSQdpDmoaZjjeatvGDNv.jpg)
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; ரூ30000 சம்பளம்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகவியல், உளவியல், சமூகப்பணிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.சி, எம்.பி.சி பிரிவினர் 32 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம் (பழைய கட்டடம்), ஈரோடு - 638011
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.