காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் காரப்பேட்டை அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 112 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
செவிலியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 112
கல்வித் தகுதி: Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2025/07/17521387223046.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631501
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.