கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய நலவாழ்வு திட்டத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
ஆய்வக நுட்புனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
காசநோய் சுகாதாரப் பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் MPW/ LHV/ ANM/ Health Worker சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
மாவட்ட மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
வயதுத் தகுதி: 01.03.2025 அன்று 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட நெஞ்சக நோய் மையம், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், ஆசாரிப்பள்ளம் – 629201, கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.