/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நூலகர் மற்றும் காப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 7700-24200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.