தமிழக அரசில் நிரந்தர பணியிட வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

கோவை மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குனர் அலுவலக வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

கோவை மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குனர் அலுவலக வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
tn govt jobs

கோவை மண்டல புள்ளிஇயல் இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2025குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிரந்தர முழுநேரக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Advertisment

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: ரூ. 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/08/17551791141918.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர், மண்டலப் புள்ளிஇயல் அலுவலகம், முதல் தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் - 18

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

kovai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: