New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் காலியாக உள்ள சட்ட பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சட்டப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எல்.எல்.பி அல்லது அதற்கு நிகரான சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வழக்கறிஞராக பதிவு, செய்து 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: சமூக நல இயக்குனரகம், லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 05
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.