திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மருந்தாளுநர் (Pharmacist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Pharmacy / Bachelor of Pharmacy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 15,000
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
ஆய்வக நுட்புனர் (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,000
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2025/07/17537757228990.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செயற் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 54/5 ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.