தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் எழுத்தர், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
டிக்கெட் விற்பனை எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
திருவலகு
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
விடுதிக் காப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
பலவேலை
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : குழாய் தொழில் அல்லது குழாய் பணியர் பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 2 வருட தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000 – 56,900
மின் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : மின் பணியாளர் பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,600 – 52,400
மினி பஸ் கிளீனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
உபகோயில் அருள்மிகு கரிவரதராஜபெருமாள் கோயில் பணியிடங்கள்
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 11,600 – 36,800
திருவலகு
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641016
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.