Advertisment

அரசு மருத்துவ கல்லூரிகளில் 25% இடங்கள் காலி; அகில இந்திய இடங்கள் மாநில கவுன்சலிங்கிற்கு ஒதுக்கப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 25% இடங்கள் காலி; அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மாநில கவுன்சலிங்கிற்கு ஒதுக்கப்படுமா?; கல்வியாளர்கள் கோரிக்கை

author-image
WebDesk
New Update
mbbs students

மருத்துவ படிப்பு

மருத்துவ ஆலோசனைக் குழுவால் நடத்தப்பட்ட இரண்டு சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களில் கிட்டத்தட்ட கால் பகுதி காலியாக உள்ளது.

Advertisment

மருத்துவ ஆலோசனைக் குழுவானது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கை நடத்துகிறது, மேலும் மத்திய நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கும் மாணவர்களை ஒதுக்குகிறது. இதன்படி அரசு கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 835 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 இடங்களும், கே.கே.நகரில் உள்ள ESIC மருத்துவக் கல்லூரியில் 23 இடங்களும் அடங்கும். நீட் தேர்வு (NEET) தகுதி மற்றும் இடஒதுக்கீடு விதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சுற்று 1 முடிவில், 213 மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் சேர்ந்தனர். TOI வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2வது சுற்று முடிவில், 619 இடங்கள் நிரப்பப்பட்டு, 216 இடங்கள் காலியாக உள்ளன.

இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 22 இடங்களும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 15 இடங்களும், இ.எஸ்.ஐ.சி, கே.கே நகரில் 14 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் 12 இடங்களும், கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 11 இடங்களும் அடங்கும்.

”மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கவுன்சிலிங் அதிகாரிகள் முதல் சுற்றில் இலவசமாக வெளியேற அனுமதிப்பதால், தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாவது சுற்றில், வெளியேற விரும்பும் மாணவர்கள் வைப்புத்தொகையை மட்டும் இழக்க நேரிடும். அவர்கள் மாப்-அப் சுற்றில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியேற அனுமதிக்கவில்லை என்றால் கவுன்சிலிங் நேரத்தை குறைக்க முடியும். ஒதுக்கப்பட்ட இடங்களில் சேராத மாணவர்களை கவுன்சிலிங்கில் இருந்து வெளியேற்ற வேண்டும்என்று கல்வியாளர்கள் கூறினார்.

இதற்கிடையில், கவுன்சிலிங்கின் போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. காலியாக உள்ள இடங்களை மாநில அரசுக்கு திருப்பித் தருவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, ஆறு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகு, அரசு கல்லூரிகளில் ஆறு இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு இருக்கைகள் காலியாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment