தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சீட் ஃபுல்; சுயநிதி கல்லூரிகளில் இன்னும் காலியிடங்கள்!

எம்.பி.பி.எஸ் சிறப்பு கலந்தாய்வு; தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை; சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களில் ஆறு இடங்கள் இன்னும் காலி!

எம்.பி.பி.எஸ் சிறப்பு கலந்தாய்வு; தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை; சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களில் ஆறு இடங்கள் இன்னும் காலி!

author-image
WebDesk
New Update
mbbs students

எம்.பி.பி.எஸ் சிறப்பு கலந்தாய்வு; தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை; சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களில் ஆறு இடங்கள் இன்னும் காலி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களும் சிறப்புக் கலந்தாய்வின் போது நிரப்பப்பட்டன, அதே நேரம் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களில் ஆறு இடங்கள் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கைப் பெறாததால் இன்னும் காலியாகவே உள்ளன.

Advertisment

இந்த ஆண்டு, நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் காலியாக உள்ளதால், சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) மருத்துவ கவுன்சலிங் குழு (MCC) உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கை நீட்டித்தது.

இதனையடுத்து, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கைக்கு பொறுப்பான மருத்துவ கவுன்சலிங் குழு, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும், மதுரை எய்ம்ஸில் மூன்று இடங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 50 இடங்களுக்கும் கவுன்சிலிங்கை நடத்தியது.

இந்தநிலையில், ”மாநில மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் காலியிடங்கள் பற்றிய தகவல்கள் இல்லை, ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இல்லை,” என மாநில கவுன்சலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisment
Advertisements

ஆனால், மாநிலத் தேர்வுக் குழுவால் கவுன்சிலிங் நடத்தப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 18 இடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் மூன்று இடங்களும், திருச்சி தி நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தலா ஒரு இடமும் இன்னும் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்கள் குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் நிரம்பியதற்கு ஒரு காரணம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை எடுக்காவிட்டால், ஒரு வருடத்திற்கு மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள முடியாது என்ற தேசிய கவுன்சலிங் கமிட்டியின் விதிமுறையாகும். ஆனால் மாநில கவுன்சிலிங்கில் அந்த விதி இல்லை. இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டன, ஆனால் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கைப் பெறவில்லை. இதனால் இந்த இருக்கைகள் வீணாகிவிடும், என்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Mbbs Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: