Advertisment

தமிழக அரசின் நீட், ஜே.இ.இ பயிற்சி; 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நீட், ஜே.இ.இ பயிற்சி வகுப்புகள்; 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு; தினமும் தேர்வுகள் நடத்த திட்டம்

author-image
WebDesk
New Update
NEET coaching

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நீட், ஜே.இ.இ பயிற்சி வகுப்புகள்; 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு; தினமும் தேர்வுகள் நடத்த திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) ஆகியவற்றுக்கு தமிழக அரசின் இலவசப் பயிற்சிக்காகச் சேர்ந்துள்ளனர்.

Advertisment

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இருந்து NEET பயிற்சிக்கு 46,216 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், 29,279 பேர் JEE பயிற்சிக்காக சேர்ந்துள்ளனர். 31,730 மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய இரண்டிற்கும் சேர்ந்துள்ளனர்என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, பள்ளிக் கல்வித் துறையானது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்காக ஒரு தேர்வுத் தொடரைத் தயாரித்துள்ளது. புதிய பயிற்சித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தினமும் தேர்வுகள் நடத்தப்படும். மாநில அளவிலான ஆசிரியர் குழு தேர்வுக்கான கேள்விகளைத் தயாரிக்கும். இந்தக் குழு கேள்விப் புத்தகங்களைத் தயாரித்து மாவட்டங்களுக்கு அனுப்பும். தேர்வுகளுக்கு முன்னதாக பள்ளிகள் இந்த வினாத்தாள்களை விநியோகிக்கும். பள்ளி நேரத்திற்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படும், என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாணவரும் ஒரு பாடத்தில் குறைந்தது 20 தேர்வுகளை எழுதுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 15 கேள்விகளைத் தீர்ப்பார்கள். இந்தத் தேர்வுகள் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கு ஏற்ப மைனஸ் மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாரமும் அவர்கள் தீர்வுகளுடன் பதில்களைப் பெறுவார்கள். இறுதித் தேர்வு ஒரு ஒருங்கிணைந்த தேர்வாக இருக்கும், மேலும் மாணவர்களுக்கும் சந்தேகம் தீர்க்கும் அமர்வுகள் இருக்கும். இதன் மூலம் NEET விண்ணப்பதாரர்கள் ஒரு வாரத்திற்கு குறைந்தது 60 கேள்விகளை முயற்சிப்பார்கள், JEE விண்ணப்பதாரர்கள் ஒரு வாரத்திற்கு 45 கேள்விகளை முயற்சிப்பார்கள்.

பயிற்சி மற்றும் தேர்வுத் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நடைபெறும். ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 13,000 மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். அவர்களில் 3982 பேர் (31%) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், பயிற்சி வகுப்புகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Neet Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment