Advertisment

டிப்ளமோ படிப்புகளுக்கு புதிய சிலபஸ் வெளியீடு; எந்தெந்த கோர்ஸ்களுக்கு மாற்றம்?

தமிழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கான புதிய சிலபஸ் ஆன்லைனில் வெளியீடு; தொழில்துறை தேவைகளைக் கருத்தில் கொண்டு முக்கிய பாடப்பிரிவுகளுக்கு பாடத்திட்டத்தை மாற்றியமைத்த தமிழக அரசு

author-image
WebDesk
New Update
college students

தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் கணினி பொறியியல் உள்ளிட்ட ஐந்து முக்கிய டிப்ளமோ படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

Advertisment

தமிழகத்தில் தற்போது 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உட்பட 492 பாலிடெக்னிக் செயல்பட்டு வருகின்றன. இந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் கணினி பொறியியல் உள்ளிட்ட ஐந்து முக்கிய டிப்ளமோ படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ படிப்புகளுக்கான புதிய விதிமுறை 2023ன் கீழ் மூன்றாவது, நான்காவது, ஐந்தாம் மற்றும் ஆறாவது செமஸ்டர்களின் (மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி பொறியியல்) இறுதிப் பாடத்திட்டங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தொழிநுட்ப கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், வளர்ந்து வரும் தொழில்மயமாக்கலை ஆதரிக்க திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதன் மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. தமிழகப் பொருளாதாரம் குறைந்த செலவில் வேலை செய்யும் திறமையைக் காட்டிலும் ஆழமான தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்துகிறது. 

குறிப்பாக பொறியியல் மற்றும் கணக்கீட்டில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் தொழில்துறை தேவைகள் மாறிவிட்டன. தொழில்-கல்வி இடைவெளியைக் குறைக்க திறன் அடிப்படையிலான திறமை தேவை. தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஆற்றலைப் பயன்படுத்தி மாற்றத்தை வழிநடத்தவும், சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை வழங்கவும் கூடிய அடுத்த தலைமுறை மிகவும் திறமையான நபர்களை வளர்ப்பதற்காக பாடத்திட்டம் சீர்திருத்தப்பட்டது.

பாடத்திட்டத்தை மறுவடிவமைக்கும் போது தொழிற்சாலைகள் மற்றும் தமிழ்நாடு அரசு வழிகாட்டி ஆகியவற்றிலிருந்து உள்ளீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. திறன்-மைய மற்றும் தொழில் சார்ந்த பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது, என அதிகாரிகள் கூறியதாக டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Educational News Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment