Advertisment

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்; கோவை முதலிடம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்திய கோவை; 96.02% பேர் தேர்ச்சி

author-image
WebDesk
New Update
Plus 1 results

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்திய கோவை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

Advertisment

பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16,484 ஆண்கள், 19,144 பெண்கள் என மொத்தம் 35,628 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 15,546 ஆண்கள், 18,664 பெண்கள் என மொத்தம் 34,210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 94.31% ஆண்கள், 97.49 சதவீத பெண்கள் என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.02 சதவீதமாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

அரசு பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Exam Result kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment