/tamil-ie/media/media_files/uploads/2023/02/Tamilnadu-Police-1.jpg)
தமிழ்நாடு போலீசில் 621 உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு போலீசில் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கு 621 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்பு காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள், 20 நிரம்பியவராகவும், 30 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்புகள் மே15 ஆம் தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.
மேலும் விபரங்களுக்கு 044- 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.