Advertisment

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிலபஸ் மாற்றம்; வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2, 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்; இணையதளத்தில் வரைவு பாடத்திட்டம் வெளியீடு

author-image
WebDesk
New Update
tndte diploma result, tndte.gov.in, polytechnic result, tndte result, தமிழ்நாடு பாலிடெக்னிக் ரிசல்ட், டிப்ளமோ தேர்வு முடிவுகள்polytechnic result

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2, 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு மற்றும் 3 ஆம் ஆண்டுகளுக்கான பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 406 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

இந்த டிப்ளமோ படிப்புகளில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். அதேநேரத்தில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நேரடியாக 2 ஆம் ஆண்டு படிப்பில் சேரலாம்.

இந்தநிலையில், பொறியியலில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, 2023-2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2 ஆம் ஆண்டு மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த இரு ஆண்டுகளுக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்டம் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மே மாதம் 24 ஆம் தேதிக்குள் இணையவழியில் அறிவிக்குமாறு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment