காலாண்டு தேர்வு எப்போது? தேதியை அறிவித்த பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவித்த பள்ளிக்கல்வித் துறை; காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்?

தமிழகத்தில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவித்த பள்ளிக்கல்வித் துறை; காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்?

author-image
WebDesk
New Update
School Students Writing Exam

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்குரிய கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

10, 12 ஆம் வகுப்புகளுக்குக்கு காலையிலும், 11 ஆம் வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும். மேலும் 6, 8 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9 ஆம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடத்தப்படும். 

இதைத் தொடர்ந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி திறக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Education Department School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: