தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நாட்களை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் தேதியும் செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு
செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil