Advertisment

பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களுடன் மாற்றி அமைக்கப்படும் – பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்; புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு

author-image
WebDesk
New Update
Trichy Corporation elementary School break in and Rs 25 thousand cash robbed Tamil News

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு (SMC), 2024 முதல் 2026 வரை இரண்டு கல்வியாண்டுகளுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒரு பள்ளி மேலாண்மை குழுவை உருவாக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் குழுவில் பெற்றோர்கள், பள்ளித் தலைவர், ஒரு ஆசிரியர் மற்றும் பெற்றோரில் ஒரு மகளிர் ஆகியோர் அடங்குவர்.

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல், அடிக்கடி கூட்டங்களை நடத்துதல் மற்றும் மாவட்டங்கள் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள கிராம சபைக் கூட்டங்களுக்கு முன் சமர்பித்தல் மற்றும் பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களை நியமித்தல் போன்றவை பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளாகும்.

இந்த குழு 2022 கல்வியாண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு, பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது.

இந்தநிலையில், தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு, அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புதிய உறுப்பினர்களுடன் மறுசீரமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழுவை மறுசீரமைக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழுவை மறுசீரமைக்கும் நோக்கத்திற்காக, ஜூலை 28 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு குறித்த பெற்றோருக்கு விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு ஆகஸ்ட் 3ஆம் தேதி மறுசீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பின் முதல் சுற்று ஆகஸ்ட் 10 ஆம் தேதியும் மற்றும் இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 17 ஆம் தேதியும் நடைபெறும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பு ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

School Education School
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment