Advertisment

பள்ளி திறப்புக்கு முன் இதெல்லாம் கட்டாயம்; தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் பாதுகாப்பு, தலைமையாசிரியர், ஆசிரியர்களின் பொறுப்பு; பள்ளி திறப்புக்கு முன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

author-image
WebDesk
New Update
Trichy Corporation elementary School break in and Rs 25 thousand cash robbed Tamil News

பள்ளி திறப்புக்கு முன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. 2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். இதனையடுத்து, குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். மேலும், வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர் செய்யப்பட்ட பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும்.

திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அதன் மேற்பினை யாரும் அணுக முடியாத வண்ணம் மூடிட நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவு சோப்பு / சோப்பு கரைசல் வைக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின்சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றன என்பதை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் மரங்கள் எளிதில் விழாத வண்ணம் உள்ளதை உறுதிபடுத்த வேண்டும். பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

School Reopening
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment