Advertisment

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் தொடக்கம்; தேர்வறை வழிகாட்டுதல்கள் இங்கே

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் தொடக்கம்; ஹால் டிக்கெட் முதல் தேர்வறை வழிகாட்டுதல்கள் வரை அனைத்து விபரங்களும் இங்கே

author-image
WebDesk
New Update
Trichy 30003 students participated TN board 2024 Class 12th Plus 2 exam Tamil News

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் தொடக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி (SSLC) அல்லது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நாளை (மார்ச் 26) முதல் நடத்துகிறது. எழுத்துத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8, 2024 வரை நடைபெறும், முன்னதாக செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29, 2024 வரை நடத்தப்பட்டன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu SSLC 2024 exams begins tomorrow; Check details, guidelines

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை நவம்பர் 16, 2023 அன்று வெளியிடப்பட்டது. அதில் எழுத்துத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8, 2024 வரையும், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28, 2024 வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 24, 2024 அன்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை அவர்களின் பள்ளிகளில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10, 2024 அன்று அறிவிக்கப்படும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பைத் தேர்வுசெய்ய அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பாடங்களில் இருந்து ஒரு படிப்பைத் தேர்வைத் தேர்ந்தெடுக்கலாம்.

SSLC 2024 அட்மிட் கார்டு

- 10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட், அரசு தேர்வுகள் இயக்குநரகத்தால் (DGE) ஆன்லைனில் கிடைக்கிறது.

- பள்ளிகள் இந்த ஹால் டிக்கெட்டுகளை தங்களின் நியமிக்கப்பட்ட உள்நுழைவு மூலம் அணுகலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். 

10 ஆம் வகுப்பு தேர்வு நாள் வழிகாட்டுதல்கள்

- மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வு கூடத்திற்கு மறக்காமல் எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- தேர்வுகள் காலை 9:15 மணிக்கு தொடங்கும், எனவே மாணவர்கள் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு மையத்தை அடைய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது மாணவர்கள் தங்கள் இருக்கை ஏற்பாடுகளைச் சரிபார்த்து, கடைசி நிமிட இடையூறுகளைத் தவிர்க்க உதவுகிறது

- பொதுத் தேர்வு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் படி, மாணவர்கள் வினாத்தாள்களை படிக்க காலை 10 மணி முதல் 10:10 மணி வரை நேரம் இருக்கும். இந்த நேரத்தில், அவர்கள் எளிதான மற்றும் கடினமான கேள்விகளைக் கண்டுபிடிக்க முடியும்.

- மாணவர்கள் தங்கள் பதில்களை மறுபரிசீலனை செய்ய கொடுக்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வை முடிக்க முயற்சிக்க வேண்டும்.

- கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கணக்கீடுகளை இருமுறை சரிபார்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam Sslc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment