தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 14) நடைபெற்ற கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.
இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
கணினி அறிவியல் தேர்வு ஒட்டுமொத்தமாக எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண்கள் வினாக்கள் ஈஸியாக இருந்தன என்று மாணவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் சில மாணவர்கள் 5 மதிப்பெண்கள் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக கூறுகின்றனர்.
இதேபோல் வணிகவியல் மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இதேபோல் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் தேர்வு எளிதாக இருந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிக சென்டம் வர வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்