பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ல் தொடக்கம்; ரிசல்ட் எப்போது?

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன; தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன; தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

author-image
WebDesk
New Update
Students writing exam

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது போன்ற தவறுகள் ஏற்படாத வகையில் திருத்தும் பணிகள் நடைபெற வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

School Exam Tamilnadu School Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: