பிளஸ் 2 ரிசல்ட் முன்கூட்டியே வெளியாகிறது; தேதி இதுதான்!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும்; தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும்; தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
exam

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

இதனையடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17 ஆம் தேதி நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்துதல் பணிகளில் சுமார் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து தேர்வு முடிவுகளை மே 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்தநிலையில் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது மே 9 ஆம் தேதிக்குப் பதிலாக மே 8 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exam Result School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: