/tamil-ie/media/media_files/uploads/2022/12/tnpsc.jpg)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்வுக்கான முடிவுகள் இனனும் வெளியாகாத நிலையில், தேர்வு எழுதியவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு: அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளை மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது கிராம நிர்வாக அலுவலகர், இடைநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத 2,85,328 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் அதிகமான பெண்கள் தேர்வர்கள் அதிகம்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில், 7689 மையங்களில் நடத்தப்பட்ட இந்த சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவு இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது டிசம்பர் மாதம் 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், எப்போது குருப் 4 முடிவுகள் வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் தேர்வு முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தியதன் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது இன்னும் சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.