தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி தனித்தேர்வர்கள் தட்கல் மூலம் வருகின்ற 23, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“