TNPSC Group 2: தற்காலிக 'ஆன்சர் கீ' எப்போது? ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்

ஆன்சர் கீ மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும்

ஆன்சர் கீ மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும்

author-image
WebDesk
New Update
TNPSC வேலை வாய்ப்பு; 731 காலியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது.

5413 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழூதிய நிலையில், 1.83 லட்சம்பேர் தேர்வுக்கு வரவில்லை. இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பல கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், ஒருசில கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில். தவறான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: