Advertisment

முடிவுக்கு வந்த பொறியியல் அட்மிஷன்: 24 கல்லூரிகள் 100% மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்ட நிலையில், 41,703 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Engineering Counseling

தமிழகத்தில் இஞ்சினியரிங் கவுன்சிலிங் முடிவு

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி அட்மிஷன் சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், 24 கல்லூரிகளில் 100 சதவீதம் அட்மிஷன் முடிந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 41,703 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பொறியியல் கல்லூரிக்காக கவுன்சிலிங் தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெற்ற இந்த கவுன்சிலிங் சமீபத்தில் முடிவடைந்தது. அதன்படி தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான துணை கவுன்சிலிங் முடிவில், 71.17% இடங்கள் நிரப்பப்பட்டு, 41,703 இடங்கள் காலியாக உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான நிபுணர்களின் கூற்றுப்படி, பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,02,949 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். இதில் கவுன்சிலிங்கிற்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,44,652 இடங்கள். இதில் 41,703 இடங்கள் காலியாக உள்ள நிலையில், சிவில், மெக்கானிக்கல் மற்றும் பிற இரண்டாம் நிலைப் படிப்புகளான வேளாண் பொறியியல், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், உணவு தொழில்நுட்பம் மற்றும் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகள் அதிக காலியிடங்கள் உள்ளன.

இந்த ஆண்டு 8.63 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியதால், மெரின் இஞ்சினியரிங்கை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. தமிழ் மீடியத்தில் 23.16% மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இடங்களும், 42.59% சிவில் இன்ஜினியரிங் இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் மொத்தம் 24 கல்லூரிகள் 100% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதில் எட்டு சுயநிதி கல்லூரிகள்.

மொத்தம் 440 கல்லூரிகளில் 42 கல்லூரிகள் 160-க்கு மேல் கட்-ஆஃப் பெற்ற மாணவர்களையும்,  313 கல்லூரிகள் 120-க்கு மேல் கட்-ஆஃப் பெற்ற மாணவர்களையும், 127 கல்லூரிகள் 120-க்குக் கீழே கட்-ஆஃப் பெற்ற மாணவர்களையும் சேர்த்துள்ளன. “160க்கு மேல் கட்-ஆஃப் உள்ள கல்லூரிகள், 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான முதன்மை விருப்பங்களாகக் கருதப்படலாம்.

சராசரியாக 120க்கும் குறைவான கட்-ஆஃப் உள்ள மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகள், கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் தங்கள் மாணவர்களைச் சேர்ப்பது நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது சவாலானதாக இருக்கும். மொத்தம் 14 அரசு கல்லூரிகள், பெரும்பாலும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், சராசரி கட்-ஆஃப் 150க்கும் குறைவாகவே சேர்க்கை பெற்றன,” என்று தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment