5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்ரோபர் 3ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் திறப்புத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“