பி.எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு; அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

இந்த ஆண்டு முதல்முறையாக பி.எட் படிப்பு மாணவர் சேர்க்கை இணைய வழி கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது; அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

இந்த ஆண்டு முதல்முறையாக பி.எட் படிப்பு மாணவர் சேர்க்கை இணைய வழி கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது; அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Govi chezhiyan

தமிழகத்தில் இளங்கலை கல்வியியல் எனப்படும் பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 

கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்பட்டு வந்தது. இதனால், வெளியூர் மாணவர்கள் சென்னைக்கு வந்துசெல்லும் நிலை இருந்தது. இந்த நிலையில், வெளியூர் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வை இணைய வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். பி.எட். படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்று, தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன. மொத்தம் 3,545 பேர் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

College Admission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: