திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் தற்காலிக பணி
அடிப்படையிலான கம்பியூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதிவாய்ந்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : கம்பியூட்டர் ஆபரேட்டர்
மொத்த பணியிடங்கள் : 45
கல்வித்தகுதி : கம்பியூட்டர் சயின்ஸ், கம்பியூட்டர் அப்ளிகேசன் படிப்புகளில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு டிகிரி உடன் கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் லோயர் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 2019 ஜூலை 1ம் தேதியின் படி, வயது 18 முதல் 32 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.20,600 முதல் ரூ.65,500
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
திருநெல்வேலி - 627002
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி நாள் : ஜூலை 17, 2019