Advertisment

8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாம் : விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500- க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

author-image
WebDesk
New Update
Jobs In Villu

பாபு ராஜேந்திரன் விழுப்புரம்

Advertisment

விழுப்புரத்தில் நாளை தனியார்  துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.03.2024 (நாளை) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500- க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி பட்டப் படிப்பு முதல் ITI, Diploma, B.E/ B.Tech, Nursing, Pharmacy   தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின்* வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது.

மேலும் தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO DATA) இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Villupuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment