6- 9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு; பள்ளிக் கல்வித் துறை

6 முதல் 9 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்; கடும் வெயில் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்த திட்டம்

6 முதல் 9 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்; கடும் வெயில் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்த திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
exam

exam

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து, 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 21-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: புதுச்சேரி ஸ்டெனோ, யூ.டி.சி தேர்வுகள் எப்போது? வதந்திகளுக்கு அரசு விளக்கம்

6-9 ஆம் வகுப்புக்கு 21-ம் தேதி (வெள்ளி) தமிழ் தேர்வு, 24-ம் தேதி ஆங்கிலம் தேர்வு, 25-ம் தேதி கணிதம் தேர்வு, 26-ம் தேதி அறிவியல் தேர்வு, 27-ம் தேதி உடற்கல்வி தேர்வு, 28-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும், 6-ம் வகுப்பிற்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை, 7-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, 9-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

இந்தநிலையில், கடும் வெயில் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி ஒரு வார காலத்தில் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் தேர்வு தொடங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் எனவும் அதற்கான தேர்வு அட்டவணையையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாணவர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் முழு ஆண்டு தேர்வு தொடங்கப்பட்டு ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 11.04.2023 (செவ்வாய்கிழமை) தமிழ் தேர்வு, 12.04.2023 (புதன்கிழமை) ஆங்கிலம் தேர்வு, 18.04.2023 (செவ்வாய்) கணக்குத் தேர்வு, 19.04.2023 (புதன்கிழமை) அறிவியல் தேர்வு, 21.04.2023 வெள்ளிக்கிழமை மொழித் தாள்த் தேர்வு, 24.04.2023 சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: