தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி, 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,8,10,12 ஆம் வகுப்புகளுக்கு முற்பகலிலும், 7,9,11 ஆம் வகுப்பு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலாண்டு தேர்வு வினாத்தாள்களை பள்ளிகளே தயாரித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மாநில அளவில் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil