சிவகங்கை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... ஜவுளியில் கையால் அச்சிடும் 30 நாள் பயிற்சி: கலெக்டர் தகவல்

விவேஷியஸ் அகாடமி இணைந்து "டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுதல்" என்ற 30 நாட்கள் பயிற்சியை வழங்குகின்றன.

விவேஷியஸ் அகாடமி இணைந்து "டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுதல்" என்ற 30 நாட்கள் பயிற்சியை வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
jobs

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, தாட்கோ மற்றும் சென்னையின் விவேஷியஸ் அகாடமி இணைந்து "டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுதல்" என்ற 30 நாட்கள் பயிற்சியை வழங்குகின்றன.

Advertisment

பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, 18-30 வயதுடையவர்களும், ஆண்டுச் சம்பளம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்களும் www.tahdco.com இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். பயிற்சியை முடித்தவர்களுக்கு NSDI அங்கீகரித்த சான்றிதழும் வழங்கப்படும்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: