தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (TNDGE) 12 ஆம் வகுப்பு (HSC) மற்றும் 10 ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகளை மே மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல் 20, 2023) முடிவடைகிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றன. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் 20 வரை நடைபெற்றன. இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வுக்கு 20.87 லட்சம் பேர் விண்ணப்பம்
அரசு தேர்வுகள் இயக்குனரகம் பொதுவாக தேர்வுகளின் அட்டவணையை வெளியிடும் போது தேர்வு முடிவுகளின் தேதியையும் வெளியிடுகிறது. ஆனால், இந்தாண்டு பொதுத் தேர்வுகளுக்கான ரிசல்ட் வெளியிடும் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அரசு தேர்வுகள் இயக்குனரகம் விரைவில் அதிகாரப்பூர்வ தேதிகளை அறிவிக்கும்.
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற, மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறைத் தேர்வுகளைக் கொண்ட பாடங்களுக்கு, மாணவர்கள் எழுத்துத் தேர்வில் மொத்தம் 20 மதிப்பெண்களையும், செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களையும் பெற வேண்டும்.
10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/
படி 2: முகப்புப் பக்கத்தில், HSC தேர்வு முடிவு 2023 அல்லது SSLC தேர்வு 2023 முடிவு என்பதைக் கிளிக் செய்யவும்
படி 3: உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்
படி 4: பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
படி 5: முடிவு திரையில் தோன்றும்.
படி 6: பிரிண்ட் அவுட் எடுத்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும்
எந்தவொரு மாணவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களில் திருப்தியடையாத நிலையில், முடிவை மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் தேர்வு முடிவு வெளியான பிறகு, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை தேர்வுத்துறை வெளியிடுகிறது. அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு குறிப்பிட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மதிப்பெண்கள் அதிகரித்தால், புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண் குறிப்பு வெளியிடப்படும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil