/indian-express-tamil/media/media_files/2025/10/12/trb-exam-2025-10-12-21-27-46.jpg)
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியருக்கான தகுதித்தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த தேர்வில் தனக்கு தவறான பாடத்திற்கான வினாத்தாள் வழக்கப்பட்டதாக ஒருவர் அளித்த புகாருக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் இருந்து தகுதியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கட்ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணியிடங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 1996 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்த தேர்வை எழுத, 2 லடச்த்திற்கு அதிகமாக நபர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற இத்தேர்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்தவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
மொத்த காலிப்பணியிடங்கள், 1,996 என்ற நிலையில், இந்த தேர்வினை, எழுத 2.36 லட்சம் பேர் இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். இதனிடையே வேலூரை சேர்ந்த தேர்வர் ஒருவர், தான் வணிகவியல் பாடத்திற்கு வலிண்ணப்பம் செய்திருந்த நிலையில், தனக்கு மொழிப்பாடத்திற்கான வினாத்தாள் வழக்கப்படடதாக புகார் அளித்திருந்தார். இது குறித்து விளக்கம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வர் விண்ணப்பித்த பாடத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மொழித்தாள் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்தது தேர்வரின் தவறு என் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.