/indian-express-tamil/media/media_files/e3ZkpgQeB9XFgkGl7iTN.jpg)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்காக டி.ஆர்.பி தேர்வு நேரத்தை அதிகமாய் இழுத்து விட்டதாக தேர்வர்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் கட் ஆஃப் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று தேர்வு நடத்தியது. இதில் தமிழ் தேர்வு, விருப்பப் பாடம் தேர்வு ஆகிய இரண்டுமே கடினமாக அமைந்ததாக தேர்வர்கள் கூறி வருகின்றனர். தமிழ் தேர்வில் பொதுவான அடிப்படை இலக்கணம் தொடர்பான கேள்விகள் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பல கேள்விகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருந்தன. நூல்களின் ஆசிரியர்கள் பெயரை கேட்கும் விதமாக சில கேள்விகள் இருந்தன. கட்டாய தேர்ச்சி பெற வேண்டிய தமிழ் பாடமே சிரமமாக இருந்ததால் அதிலேயே தேர்வர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல விருப்ப பாடத் தேர்விலும் கேள்விகள் நேரடியாக இல்லை. பல கேள்விகளில் பொருத்துக பாணியில் நான்கு பதில்களை கொடுத்து அவற்றில் எது சரி என கேட்டிருந்தனர். இது மாதிரி கேள்விகளை வாசித்து புரியவே அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் தேர்வர்கள் பலர் அனைத்து கேள்விகளையும் உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் திண்டாடியதாக தெரிகிறது. பலர் குத்து மதிப்பாக ஓ.எம்.ஆர் ஷீட்டில் ரவுண்ட் செய்துவிட்டு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே தேர்வுக்கான பாடத்திட்டத்தில் புதிதாக பல பகுதிகளை கடைசி நேரத்தில் டி.ஆர்.பி சேர்த்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று தேர்வர்கள் போராடிப் பார்த்தனர். என்னிடம் டி.ஆர்.பி தேர்வை தள்ளி வைக்கவில்லை. இப்போது கேள்விகளும் அதிக நேரத்தை உள்வாங்க கூடியதாக அமைந்ததால் பல தேர்வர்கள் எதிர்பார்த்த அளவில் அதிக மதிப்பெண் பெற முடியாது என வருத்தத்துடன் கூறினர் இதனால் இந்த தேர்வில் கட் ஆப் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஆன்சர் கீ-யை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.