TET EXAM: 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்றே விண்ணபிக்க கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்வு எழுத விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்வு எழுத விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TRB-TET exam

TET EXAM: ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்றே விண்ணபிக்க கடைசி நாள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ள டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வை அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்று (செப்.7) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

Advertisment

ஆசிரியர் தகுதித் தேர்வு சுருக்கமாக டெட் தேர்வு என்பது 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. இத்தேர்வு 2 தாள்கள் கொண்டு நடைபெறும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதித்தாளாகவும், 2ஆம் தாள் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வு நடைபெறாத நிலையில், தொடர்ந்து கோரிக்கையின் மூலம் இந்தாண்டு நடத்த அறிவிப்பு வெளியாகியது.

கடந்த மாதம் 11-ம் தேதி நடப்பாண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு விண்ணிப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடை உள்ள நிலையில், தேர்வு எழுத விரும்பும் இடைநிலை ஆசிரியர்​கள், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், விண்ணிப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் தேர்வு வாரியம் கடைசி நாளான இன்றுடன் கால அவகாசம் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இணையதளம் முடங்கியதால் வரும் 10-ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான இன்று இணையதளம் முடங்கியதால் நிலையில் கால நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

Tet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: