தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 24
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக்குறிப்பு அடங்கிய உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அரியலூர் : திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022092891.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.